வவுனியா வடக்கு வலயத்திற்குட்பட்ட தரணிக்குளம் கணேஸ் வித்தியாலயத்திற்கு வடக்கு மாகாண சபை உறுப்பினர் ப.சத்தியலிங்கத்தால் சதுரங்கப்பலகைகள் வழங்கி வைக்கப்பட்டன.
வவுனியா குடியிருப்பில் அமைந்துள்ள மா.ச.உறுப்பினரின் அலுவலகத்தில் மா.ச.உறுப்பினரின் இணைப்பாளர் பா.சிந்துஜனால் மேற்படி சதுரங்கபலகைகள் பாடசாலை ஆசிரியர் திரு.பிரசாந்தனிடம் நேற்று முன்தினம் (15.05) வழங்கிவைக்கப்பட்டது.
தரணிக்குளம் கணேஸ் வித்தியாலய மாணவர்கள் வலயமட்ட சதுரங்கப் போட்டிகளில் போட்டியிட்டு முதலிடத்தைப்பெற்றுள்ள நிலையில் மாகாண மட்ட போட்டிக்கு தெரிவுசெய்யப்பட்டுள்ளனர்.
இவர்களுக்கு பயிற்சி பெறுவதற்கு போதுமான சதுரங்க பலகைகள் இல்லாமை தொடர்பில் பாடசாலை நிர்வாகம் மா.ச.உறுப்பினரிடம் கோரிக்கைவிடுத்தமைக்கு அமைவாக பொருட்கள் வழங்கி வைக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.






