சச்சினும் – நானும் மனம் திறந்த கங்குலி!!

302

sachinசச்சின் டெண்டுல்கர் பற்றி உணர்ச்சி வசப்பட்டு பேசியுள்ளார் முன்னாள் அணித்தலைவர் சவுரவ் கங்குலி. அவர் கூறுகையில்.. சப்பலுக்கும் எனக்கும் இடையே இடைவெளி ஏற்பட்டபோது என் பக்கம் நின்றார் சச்சின்.

சப்பல் பேச்சைக் கேட்டு என்னை அணியிலிருந்து விலக்கியபோது எனக்கும், சப்பலுக்கும்தான் பிரச்சினை என்று நினைத்தேன். ஆனால் நான் மீண்டும் அணிக்குத் திரும்பியபோதுதான் சப்பலுக்கும் அத்தனை பேருக்கும் பிரச்சினை என்பதை உணர்ந்தேன்.

சப்பல் என்னுடன் மட்டுமல்ல சச்சினுடனும் மோதியுள்ளார் என்பதை அப்போதுதான் அறிந்தேன். மிகவும் அமைதியான வி.வி.எஸ். லட்சுமணனையே டென்ஷன்படுத்தியவர். அவருக்கு இந்தியாவில் உண்மையிலேயே நல்ல பெயர் கிடைத்தது.

எல்லோரையும் போலவே சச்சினும் பலமுறை அப்செட் ஆகிறவர்தான். ஆனால் அதை ஒருபோதும் வெளியில் காட்டிக் கொள்ள மாட்டார். விமர்சனங்களைக் கண்டு அவர் மனம் துவண்டாலும் கூட வெளியில் காட்டிக் கொள்ள மாட்டார் என்று தெரிவித்துள்ளார்.

சச்சினும், கங்குலியும் கிட்டத்தட்ட 10 வருடம் அணியில் ஒன்றாக இணைந்து விளையாடியவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.