வவுனியாவில் இறந்த எருமை மாட்டை இறைச்சியாக்கிய இருவர் கைது!!

1141

வவுனியா காத்தார்சின்னக்குளம் பகுதியில் இறந்த எருமை மாடு ஒன்றினை இறைச்சியாக்கி விற்பனை செய்வதற்கு மேற்கொள்ளப்பட்ட முயற்சி விசேட அதிரடிப்படையினரால் முறியடிக்கப்பட்டுள்ளதுடன் இரு சந்தேக நபர்களையும் கைது செய்யப்பட்டு அவர்களிடமிருந்த 90கிலோ இறைச்சியும் மீட்கப்பட்டுள்ளது. இச்சம்பவம் குறித்து மேலும் தெரியவருகையில்,

காத்தார்சின்னக்குளம் பகுதியிலுள்ள வசித்துவந்த நபர் ஒருவரது எருமை மாடு ஒன்று கயிறு கழுத்தில் இறுக்கி உயிரிழந்துள்ளது. அவரது உறவு முறையான ஒருவரிடத்தில் நடந்த விடயத்தைத் தெரிவித்து உயிரிழந்த எருமை மாட்டினைக் கொடுத்துள்ளார்.

உயிரிழந்த எருமை மாட்டினைப் பெற்றுக் கொண்டவர் அவரது நண்பனையும் அழைத்துக் கொண்டு உயிரிழந்த எருமை மாட்டினை வெட்டி இறைச்சியாக்க முற்பட்டபோது விசேட அதிரடிப்படையினர் இவர்களை கையும் மெய்யுமாக பிடித்து 90 கிலோ வெட்டிய இறைச்சியுடன் வனஜீவராசிகள் திணைக்களத்தின் உத்தியோகத்தர்களிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளனர்.

இது தொடர்பான விசாரணைகளை வனஜீவராசிகள் திணைக்களம் மேற்கொண்டு வருவதுடன் கைது செய்யப்பட்ட இருவரையும் கைப்பற்றப்பட்ட 90 கிலோ இறைச்சியையும் நீதிமன்றத்தில் முற்படுத்த நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றனர்.