வவுனியாவில் மோட்டார் சைக்கிள் மாயம் : பொலிசார் தீவிர விசாரணை!!

642

வவுனியா புதிய பேருந்து நிலையத்திற்கு அருகில் உள்ள வர்த்தக நிலையம் ஒன்றின் முன்னால் நிறுத்தப்பட்டிருந்த மோட்டார் சைக்கிள் ஒன்று காணாமல் போயுள்ளது.

நேற்று முன்தினம் (15.05) இரவு 8 மணியளவில் குறித்த சம்பவம் இடம்பெற்றுள்ளது. இது குறித்து வவுனியா பொலிசாருக்கு உரிமையாளரால் முறைப்பாடு செய்யப்பட்ட நிலையில் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

குறித்த வர்த்தக நிலையம் மற்றும் பிரதான வீதி என்பவற்றுக்கு அருகில் பொருத்தப்பட்டுள்ள சீசீடிவி கமராவின் உதவியுடன் வவுனியா குற்றத்தடுப்பு பிரிவுப் பொலிசார் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்