வவுனியா மாவட்ட அந்தணர் ஒன்றியத்தால் முள்ளிவாய்க்கால் அஞ்சலி நிகழ்வு!!

596

முள்ளிவாய்க்கால் நினைவு தினம் வடக்கு கிழக்கு பிரதேசமெங்கும் அனுஸ்டிக்கப்பட்டு வரும் நிலையில் வவுனியா மாவட்ட அந்தணர் ஒன்றியத்தினால் இன்று (18.05.2018) காலை குருமன்காட்டு சித்தி விநாயகர் ஆலயத்தில் அஞ்சலி பிரார்த்தனை நிகழ்வு இடம்பெற்றது.

அ ந்தணர் ஒன்றியத்தின் செயலாளர் மயூரசர்மா தலைமையில் இடம்பெற்ற இந் நிகழ்வில் முத்து ஜெயந்திநாதக்குருக்கள் ஆத்மசாந்தி பிரார்த்தனையை நடத்தியிருந்தார்.

இதனையடுத்து அஞ்சலிச்சுடர்கள் ஏற்றப்பட்டு இறந்த ஆத்மாக்களுக்காக பொதுமக்கள், அந்தணர்கள், ஆலய நிர்வாகத்தினர் நெய் விளக்கேற்றி அஞ்சலி செலுத்தினர்.