நய்யாண்டி படத்தை எதிர்த்து வழக்கு!!

315

Naiyandi-movie-stillsதனுஷ், நஸ்ரியா ஜோடியாக நடித்து சமீபத்தில் ரிலீசான நய்யாண்டி படத்தை எதிர்த்து மலையாள தயாரிப்பாளர் மணி சி.கப்பன் வழக்கு தொடர்ந்துள்ளார்.

இந்த படம் ஏற்கனவே சர்ச்சையில் சிக்கி தவித்தது. படத்தின் இயக்குனர் சற்குணம் தனக்கு பதில் டூப் நடிகையை வைத்து கவர்ச்சி காட்சிகளை படமாக்கியுள்ளதாக நஸ்ரியா குற்றம் சாட்டினார். போலீஸ் கமிஷனரிடமும் புகார் அளித்தார். இதனால் படம் வெளியாகுவதில் இழுபறி ஏற்பட்டது.

அதன்பிறகு நஸ்ரியா ஆட்சேபித்த சர்ச்சைக்குரிய காட்சிகளை நீக்கி விட்டு படத்தை வெளியிட்டனர். அதுபோல் மீண்டும் பிரச்சினை உருவாகியுள்ளது. மலையாள தயாரிப்பாளர் மணி சி.கப்பன், நய்யாண்டி படத்தை எதிர்த்து நீதிமன்றுக்கு போய் உள்ளார்.

அவர் தாக்கல் செய்துள்ள மனுவில் நான் மலையாளத்தில் எடுத்து வெற்றிகரமாக ஓடிய மேலே பரம்பில் ஆன் வீடு என்ற படத்தின் கதையே நய்யாண்டி. என்னிடம் அனுமதி பெறாமல் இந்த படத்தை எடுத்துள்ளனர். எனவே இதற்கு தடை விதிக்க வேண்டும் என்று குறிப்பிட்டு உள்ளார்.

மணி சி.கப்பன் மேலும் கூறும்போது, நய்யாண்டி படத்தை யார் பார்த்தாலும் மலையாள படத்தின் தழுவல் என்பதை புரிந்து கொள்வார்கள். என் படத்தில் இருந்து 12 காட்சிகளை அப்படியே கொப்பியடித்து படமாக்கி உள்ளனர்.

வசனமும் அப்படியே உள்ளது. இந்த படத்தை இந்தியில் ரீமேக் செய்ய பேச்சுவார்த்தை நடத்தி வந்தேன். இந்த நிலையில் தமிழில் எனக்கு தெரியாமல் எடுத்துள்ளனர் என்றார். இந்த வழக்கை விசாரித்த நீதிபதி நய்யாண்டி’படத்துக்கு இடைக்கால தடை உத்தரவு பிறப்பித்து உத்தரவிட்டார்.