வவுனியாவில் முள்ளிவாய்க்காலில் உயிர்நீத்தவர்களுக்கு சுடரேற்றி அஞ்சலி!!

529

 

முள்ளிவாய்க்காலில் உயிர்நீத்த மக்களுக்கான சுடரேற்றி அஞ்சலி செலுத்தும் நிகழ்வு இன்று (18.05.2018) காலை 7.30 மணியளவில் வவுனியா குட்செட் வீதியில் அமைந்துள்ள கருமாரியம்மன் ஆலயத்தில் தமிழ் விருட்சம் அமைப்பினர் மற்றும் ஆலய பரிபாலன சபை ஏற்பாட்டில் நடைபெற்றது.

முள்ளிவாய்க்காலில் உயிர்நீத்த மக்களுக்கான ஆத்மா சாந்தியடைய வேண்டி ஆலயத்தின் பிரதம குரு சிவஸ்ரீ பிரபாகர குருக்கள் பூஜை வழிபாடுகளை மேற்கொண்டிருந்தார். நிகழ்வில் சுட்டிகளில் நெய்விளக்கேற்றி உயிர் நீத்தவர்களை நினைவு கூர்ந்து அஞ்சலி செலுத்தப்பட்டது.

இந் நிகழ்வில் வன்னி பாராளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தன், வடக்கு மாகாணசபை உறுப்பினர் சிவாஜிலிங்கம், முன்னாள் வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் வினோ நோகதாரலிங்கம், முன்னாள் வடக்கு மாகாணசபை உறுப்பினர் எஸ்.மயூரன், வவுனியா நகரசபை உப நகரபிதா எஸ்.குமாரசாமி, தமிழ் விருட்சம் சமூக ஆர்வலர் அமைப்பின் தலைவர் எஸ்.சந்திரகுமார் , பொது அமைப்புக்களின் பிரதிநிதிகள், பொதுமக்கள் என பலரும் கலந்துகொண்டு சுடரேற்றி அஞ்சலி செலுத்தினர்.