இலங்கையில் வியப்பூட்டும் அபூர்வ சம்பவம்!!

613

இலங்கையில் மயில் குஞ்சுகள் இரண்டினை கோழி ஒன்று பாதுகாக்கும் அபூர்வ சம்பவம் ஒன்று பதிவாகியுள்ளது. தம்பதெனிய, சாலியாய ஸ்ரீ வர்தனாராம விகாரையில் வாழும் கோழி ஒன்று தனது இனத்திற்கு சொந்தமல்லாத மயில் குஞ்சுகளை பாதுகாத்து வருகிது,

தனது பிள்ளைகளை போன்று மிகவும் அன்புடன் இந்த கோழி, மயில் குஞ்சுகளை பாதுகாப்பதாக அந்த பகுதி மக்கள் தெரிவித்துள்ளனர்.

இந்த மயில் குஞ்சுகளுக்காக கோழி உணவு தேடி வழங்கி வருகிறது. மக்கள் சமூகத்தில் பார்க்க முடியாத அபூர்வ சம்பவங்களையும், உலகத்திற்கு எடுத்துக்காட்டான சம்பவங்களையும் மிருகங்கள் மத்தியில் இன்று பார்க்க முடிகின்றதென மக்கள் தெரிவித்துள்ளனர்.