மின்னல் தாக்கி இளைஞரொருவர் பரிதாபமாக உயிரிழப்பு!!

1313

திருகோணமலை – தம்பலகாமம் பகுதியில் வயல் வெளியில் வேலை செய்து கொண்டிருந்த இளைஞரொருவர் மின்னல் தாக்கி உயிரிழந்துள்ளார்.

சம்பவத்தில் நான்காம் வாய்க்கால் பகுதியை சேர்ந்த என்.எம்.முனீஸ் எனும் 20 வயது இளைஞரே உயிரிழந்துள்ளதாக தம்பலகாமம் பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

இந்த சம்பவம் நேற்று மாலை இடம்பெற்றுள்ளதுடன், உயிரிழந்தவரின் சடலம் கந்தளாய் தள வைத்தியசாலையில் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளது.

இதேவேளை உறவினர்களிடம் சடலத்தினை கையளிப்பதற்கான நடவடிக்கைகளை பொலிஸார் மேற்கொண்டு வருவதுடன், மேலதிக விசாரணைகளையும் முன்னெடுத்து வருகின்றனர்.