வவுனியாவில் பெரும்பாலான வர்த்தக நிலையங்கள் வியாபார நடவடிக்கையில்!!

718

 

முள்ளிவாய்க்கால் இனப்படுகொலையின் 9ம் ஆண்டு நினைவேந்தல் நிகழ்வு இன்றைய தினம் (18.05.2018) வடக்கு, கிழக்கு பகுதிகளில் இடம் பெறவுள்ளமையினால் இன்றைய தினத்தினை துக்க நாளாக வடமாகாணசபை பிரகடனப்படுத்தியுள்ள நிலையில் வர்த்தக நிலையங்களை மதியம் 12 மணிவரை மூடி துக்க நாளாக அனுஸ்டிக்குமாறு வர்த்தக சங்கம், வர்த்தர்களுக்கு வேண்டுகோள் விடுத்திருந்தது.

இருந்தபோதும் வவுனியா நகரில் பெரும்பாலான கடைகள் திறந்து வியாபார நடவடிக்கையில் ஈடுபடுவதை காணக்கூடியதாக இருக்கிறது.

வவுனியாவிலுள்ள அனைத்து வர்த்தக நிலையங்களும் மதியம் 12 மணிக்கு பின்னர் வியாபார நடவடிக்கையில் மேற்கொள்ளுமாறும் வர்த்தக சங்கத்தினர் நேற்று கோரிக்கை விடுத்திருந்தமை குறிப்பிடத்தக்கது.