நகை வாங்க வந்த நபர் செய்த மோசமான காரியம் : சிசிடீவியில் பதிவாகியுள்ள காட்சிகள்!!

489

 

நுவரெலியா நகரிலுள்ள தங்க நகைக்கடையொன்றிலிருந்து ஆபரணங்களை திருடிச் சென்ற நபரை சிசிடீவியில் பதிவாகியுள்ள காட்சிகளின் அடிப்படையில் கைது செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இது தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,

கடந்த 16ஆம் திகதி காலையில் குறித்த கடைக்கு நகை வாங்குவது போல் வந்து ஊழியர்களிடம் சகஜமாக பேசிக் கொண்டிருந்த சந்தேகநபர் நூதன முறையில் 5 இலட்சம் ரூபா பெறுமதியான தங்க மோதிரம் மற்றும் தோடு ஆகியவற்றை திருடிச் சென்றுள்ளார்.

இந்த நிலையில் கடை உரிமையாளர் தங்க நகைகள் சில காணாமல்போயுள்ளதை அவதானித்துள்ளார். இதனையடுத்து சிசிடீவியில் பதிவாகிய காட்சிகளை பார்த்த போது சந்தேகநபர் அணிந்திருந்த காற்சட்டை பையில் திருடிய நகைகளை போடும் காட்சிகள் தெளிவாக பதிவாயுள்ளதை அவதானித்துள்ளார்.

இதனைத் தொடர்ந்து நுவரெலியா பொலிஸாருக்கு தகவல் வழங்கப்பட்டுள்ளதோடு முறைப்பாடொன்றும் நகைக்கடை உரிமையாளரால் பதிவு செய்யப்பட்டுள்ளது.

இதனையடுத்து நுவரெலியா பொலிஸார் சந்தேகநபரை தேடும் நடவடிக்கையில் ஈடுப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.