வவுனியாவில் புதையல் தோண்ட முற்பட்ட தமிழ் இளைஞர்கள் உட்பட ஐவர் கைது!!

1292

வவுனியா வாரிக்குட்டியூர் பகுதியில் இன்று (19.05.2018) அதிகாலை 12.10 மணியளவில் புதையல் தோண்ட முற்பட்ட ஜவரை பூவரசங்குளம் பொலிஸார் கைது செய்துள்ளனர்.

வவுனியா வாரிக்குட்டியூர் சங்கராபுரம் பகுதியில் புதையல் தோண்டுவதாக பூவரசங்குளம் பொலிஸாருக்கு கிடைத்த இரகசிய தகவலின் அடிப்படையில் சம்பவ இடத்திற்கு விரைந்த பொலிஸார் அங்கு புதையல் தோண்டுவதற்கு தயார் நிலையில் நின்ற வவுனியா தேக்கவத்தை, சாந்தசோலை, மதவாச்சி போன்ற பகுதிகளை சேர்ந்த 27, 29, 30, 42, 44 வயதுடைய ஐவரை பொலிஸார் கைது செய்ததுடன் அவர்களிமிருந்து புதையல் தோண்டுவதற்கு பயன்படுத்தப்பட்ட அலவாங்கு உட்பட பல பொருட்களை கைப்பற்றியுள்ளனர்.

அவர்களிடம் தற்போது விசாரணைகள் இடம்பெற்று வருவதாகவும் விசாரணைகளின் பின்னர் மாவட்ட நீதவான் முன்னிலையில் ஆயர்படுத்தவுள்ளதாகவும் பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.