43 இலங்கையர்கள் இந்தோனேசியாவில் கைது..

410

சட்டவிரோதமான முறையில் அவுஸ்திரேலியா செல்ல முற்பட்ட 43 இலங்கையர்களை இந்தோனேசிய அதிகாரிகள் கைது செய்துள்ளனர்.இந்தோனேசியாவின் சியான்ஜுர் பகுதியில் வைத்து அவர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

ஜாவா தீவின் கடல் ஊடாக அவர்கள் அவுஸ்திரேலியா செல்வதற்கு தயாரான நிலையிலேயே அவர்கள் அனைவரும் கைது செய்யப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.

அவர்களிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளின் பின்னர், தற்போது அவர்கள் அனைவரும் இந்தோனேசியாவின் குடிவரவுத்துறை அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளனர்.

விமானம் மூலம் இந்தோனேசியாவுக்குள் நுழைந்த அவர்கள், அங்கிருந்து படகு ஒன்றின் மூலம் அவுஸ்திரேலியா செல்ல திட்டமிட்டிருந்ததாக தெரிவிக்கப்படுகிறது.