வவுனியாவில் இராணுவ வீரர்கள் வெற்றிநாள் அனுஷ்டிப்பு!!

323

மே 19 இராணுவ வெற்றி நாள் இலங்கை அரசாங்கத்தினால் கடைப்பிடிக்கப்பட்டு வருகின்றது. இன்று (19.05) பிற்பகல் 12 மணியளவில் வவுனியா பழைய பேருந்து நிலையத்திற்கு முன்பாக உள்ள லெப்டிணன்ட் ஜெனரல் லக்ஸ்மன் கொப்பேகடுவ நினைவு தூபியில் வடமாகாணசபை உறுப்பினர் தர்மபால செனவிரட்ன தலைமையில் நிகழ்வு இடம்பெற்றது.

இராணுவ வெற்றி நாள் நிகழ்வில் கொப்பேகடுவ சிலைக்கு மலர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தியதுடன் உயிரிழந்த படையினர், பொதுமக்கள் அனைவருக்காகவும் ஒரு நிமிடம் மௌன அஞ்சலி செலுத்தப்பட்டது.

வவுனியா தெற்கு சிங்கள பிரதேச சபை உப தவிசாளர் வசந்தகுமார, உறுப்பினர் சானுர, தமிழ் தெற்கு பிரதேச சபை உறுப்பினர் துசார மற்றும் சகல கட்சி உறுப்பினர்கள் உட்பட பெருமளவானோர் கலந்துகொண்டனர்.