வவுனியாவில் பாரம்பரிய உற்பத்திகள் விற்பனை நிலையம் திறந்துவைப்பு!!

376

 

வவுனியாவில் ‘அறம்’ பாரம்பரிய உற்பத்திகள் விற்பனை நிலையம் உயர்கல்வி மற்றும் கலாசார அலுவல்கள் அமைச்சர் விஜியதாச ராஜபக்சவினால் மக்கள் பாவனைக்காக இன்று (19.05) திறந்து வைக்கப்பட்டது.

உயர்கல்வி மற்றும் கலாசார அலுவல்கள் அமைச்சினால் பாரம்பரிய உற்பத்தி கைத்தொழில் மேம்பாட்டு வேலைத்திட்டத்தின் கீழ் வவுனியா நகரத்தில் நிர்மாணிக்கப்பட்ட பாரம்பரிய உற்பத்திகள் பொருள் விற்பனை நிலையத்தின் திறப்பு விழா நிகழ்வுகள் மாவட்ட அரசாங்க அதிபர் விதான பத்திரன தலைமையில் நடைபெற்றது.

விருந்தினர்கள் மாலை அணிவித்து, கலாசார நடன நிகழ்வுகளுடன் அழைத்து வரப்பட்டதுடன் தேசியக் கொடியேற்றல் வைபவத்துடன் நிகழ்வுகள் ஆரம்பித்து வைக்கப்பட்டது.

நிகழ்வில் சர்வமாத குருமார்களின் ஆசிச் செய்தியும் இடம்பெற்றிருந்தது. நிகழ்வின் இறுதியில் பிரதம விருந்தினருக்கு நினைவு பரிசில்களும் வழங்கி வைக்கப்பட்டது.

நிகழ்வில் சிறப்பு அதிதியாக கலந்துகொண்டு உரையாற்றிய வன்னி பாராளுமன்ற உறுப்பினர் கே.கே.மஸ்தான் அரச வேலை வாய்ப்புக்களில் வன்னி மாவட்டத்திலுள்ள இளைஞர் யுவதிகளுக்கு முன்னுரிமை வழங்க அரசாங்கம் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என கேட்டுக்கொண்டார்.