வெலிமடை – பதுளை பிரதான வீதியின், ஹலிஎல அம்பஉக பகுதியில் வானொன்று 80 அடி பள்ளத்தில் பாய்ந்து விபத்திற்கு உள்ளாகியுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
குறித்த விபத்து இன்று அதிகாலை மூன்று மணியளவில் நேர்ந்துள்ளதுடன், இதன்போது வானில் பயணித்த மூன்று பேர் படுகாயங்களுக்குள்ளாகி பதுளை மாவட்ட வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
கொழும்பு பகுதியிலிருந்து நுவரெலியா, வெலிமடை வழியாக பசறை பகுதியிலுள்ள மரண சடங்கொன்றிட்காக பயணித்தவர்களின் வானே விபத்துக்குள்ளாகியுள்ளது.
வாகன சாரதிக்கு வாகனத்தை கட்டுப்படுத்த முடியாததன் காரணமாகவே விபத்து இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளதுடன், இது தொடர்பான மேலதிக விசாரணைகளை ஹலிஎல பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.







