புகையிரதத்துடன் மோதுண்டு ஒருவர் பரிதாபமாக பலி!!

617

அலவ்வ – கபுவர்ன அருகாமையில் புகையிரத வீதியில் புகையிரதத்துடன் மோதுண்டு ஒருவர் உயிரிழந்துள்ளார். நேற்று காலை குறித்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.

கண்டி தொடக்கம் கொழும்பு நோக்கி பயணித்து கொண்டிருந்த புகையிரதத்துடன் மோதுண்டு உயிரிழந்துள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

இதேவேளை காலி – தெவவ பிரதேசத்தில் வாகனம் ஒன்றுடன் மோதுண்டு ஒருவர் உயிரிழந்துள்ளதாக காவற்துறை தெரிவித்துள்ளது.

வெலிமட பிரதேசத்தினை சேர்ந்த 67 வயதுடைய நபரே இவ்வாறு உயிரிழந்துள்ளதாக காவற்துறை குறிப்பிட்டுள்ளது.