வவுனியாவைச் சேர்ந்த இளைஞன் விபத்தில் பரிதாபமாக பலி!!

500

முள்ளியவளை நெடுங்கேணி வீதியில் நேற்று முன்தினம் இரவு மண் ஏற்றி சென்ற டிப்பர் வாகனம் ஒன்று விபத்துக்குள்ளாகியதில் சம்பவ இடத்திலேயே ஒருவர் உயிரிழந்துள்ளதுள்ளதுடன் மற்றுமொருவர் படுகாயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதி்க்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

முள்ளிவளைப்பகுதியில் இருந்து வவுனியா நோக்கி மண் ஏற்றி சென்ற டிப்பர் வாகனம் ஒன்று களிக்காட்டுப்பகுதியில் வீதியில் குறுக்கே நின்ற மாடு ஒன்றின் மீது மோதவிடாமல் விலகிசெல்ல முயற்சித்த போது டிப்பர் வாகனம் தடம் புரண்டு விபத்துக்குள்ளாகியுள்ளது.

இந்த வாகனத்தை ஓட்டிச்சென்று கொண்டிருந்த சாரதி டிப்பரில் இருந்த மண் மூடப்பட்டு மூச்சு திணறி உயிரிழந்துள்ளார். சம்பவம் குறித்து முள்ளியவளை பொலிஸார் விசாரனைகளை முன்னெடுத்துள்ளதாக தெரிவித்துள்ளனர்.

இந்த சம்பவத்தில் டிப்பர் வாகனத்தின் சாரதியான வவுனியா கல்மடு பகுதியினை சேர்ந்த 28 அகவையுடைய விவேகானந்தராசா றொபின்சன் என்பவர் உயிரிழந்துள்ளதுடன் 24 அகவையுடைய கூழாமுறிப்பினை சேர்ந்த செல்வக்குமார் தர்சன் என்ற இளைஞன் காயமடைந்த நிலையில் மாவட்ட மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவருகின்றார். இந்த விபத்து தொடர்பில் மேலதிக விசாரணைகளை பொலிஸார் முன்னெடுத்துள்ளனர்