இலங்கை கிரிக்கெட் அணியின் பிரதான பயிற்றுவிப்பாளர் பதவிக்கான இறுதி நேர்முகத் தேர்விற்கு மாவன் அத்தபத்து மற்றும் மார்க் டெவிஸ் ஆகியோரின் பெயர்கள் அறிவிக்கப்பட்டுள்ளன.
தற்போதைய பயிற்றுவிப்பாளர் கிரகம் போர்ட் இன் பதவிக்காலம் முடிந்ததை அடுத்து வெற்றிடமாகும் பதவிக்காக பல முக்கிய பிரபலங்கள் பயிற்றுவிப்பாளர் பதவிக்காக விண்ணப்பித்திருந்தனர்.
இன் நிலையில் இறுதி நேர்முகத் தேர்விற்கு மாவன் அத்தபத்து மற்றும் மார்க் டெவிஸ் ஆகியோர் அழைக்கப்பட்டிருப்பதாகவும் இதில் மாவன் அத்தபத்து தெரிவுசெய்யப்படுவதற்கான அதிக வாய்ப்புகள் காணப்படுவதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.