ஆழ்ந்த உறக்கத்தில் இருப்பவர்களை ஏன் எழுப்ப கூடாது என்று சொல்லுவார்கள் தெரியுமா?

418

நாம் ஆன்மா என்று சொல்லப்படுவதைத் தான் நாம் உயிர், ஆவி என்றெல்லாம் வேறுவேறு பெயர்களில் சொல்லுகிறோம். ஆன்மாவானது நாம் ஆழ்ந்த உறக்கத்தில் இருக்கும்பொழுது நம்முடைய உடலைவிட்டு ஆன்மா வெளி உலகத்தைச் சுற்றி வருவதாகக் கூறப்படுகிறது

நாம் ஆழ்ந்த உறக்கத்தில் இருக்கும்போது நம்முடைய ஆன்மாவானது ஊர் சுற்றிப்பார்ப்பதற்காக நம்முடைய உடலைவிட்டு வெளியே புறப்பட்டுச் செல்லுமாம். அதனால் தான் ஒருவர் தூங்கும்போது அவசரமாக அவரை எழுப்பக்கூடாது என்று சொல்கிறார்களாம்.

நல்ல ஆழ்ந்த தூக்கத்தில் இருப்பவர்களை தட்டி எழுப்பும்போது, உடலைவிட்டு, வெளியுலகத்தில் சுற்றும் ஆன்மாவானது பல லட்சம் கிலோமீட்டர் வேகத்தில் மீண்டும் உடலுக்குள் புகுந்து கொள்ளும் என்று ஆத்ம சாஸ்திரத்தில் கூறப்பட்டுள்ளது.

அதனால் தான் அடிக்கடி தூக்கத்தில் இருப்பவர்களை அப்படி அடிக்கடி வேகமாகவோ திடீரெனவோ தட்டி எழுப்பினால் அவர்களுக்கு மனநிலை பாதிக்கப்படக்கூடும் என்று மருத்துவர்கள் குறிப்பிடுகிறார்கள்.