ஹொரணை, ஹெகலவத்தை பகுதியில் மின்னல் தாக்கியதில் பௌத்த பெண் துறவியொருவர் பரிதாபமாக உயிரிழந்துள்ளார் என அப்பகுதிப் பொலிஸார் தெரிவித்தனர்.
ஹொரணை, ஹெகலவத்தையில் உள்ள தியான நிலையத்தில் 62 வயதுடைய பெண் பௌத்த துறவியே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
இந்நிலையில் அவரின் உடல் மருத்துவமனையில் வைக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இதேவேளை, நேற்று காலை வயலில் வேலை செய்துகொண்டிருந்த இருவர் குருநாகல் பகுதியில் மின்னல் தாக்கி உயிரிழந்துள்ளனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.





