காலி முகத்திடலில் நபர் ஒருவர் தற்கொலை!!

528

காலி முகத்திடல் கடற் பிரதேசத்தில் நபர் ஒருவர் தற்கொலை செய்து கொண்டுள்ளார். நேற்று முன்தினம் மாலை குறித்த நபர் இவ்வாறு தற்கொலை செய்து கொண்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

பன்னிப்பிடிய – ருக்மலே பிரதேசத்தினை சேர்ந்த 75 வயதுடைய நபரே இவ்வாறு தற்கொலை செய்து கொண்டுள்ளார். சடலம் கொழும்பு தேசிய மருத்துவமனையில் மருத்துவ பரிசோதனைக்காக வைக்கப்பட்டிருந்தது.

பிரேத பரிசோதனை இடம்பெற்றுள்ளதுடன், கோட்டை பொலிசார் சம்பவம் குறித்து விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.