பூச்சி மருந்து வில்லை தொண்டையில் சிக்கி சிறுமி பரிதாபமாக பலி!!

746

பாதுக்க கொரலஹிம அலுத்வத்த என்னும் இடத்தைச் சேர்ந்த சிறுமியொருவர் பூச்சி ம ருந்து வில்லை தொண்டடையில் சிக்கி பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.
நான்கு வயதான தினுர திமான் தெவ்மிகா என்ற சிறுமியே இவ்வாறு சம்பவத்தில் உயிரிழந்துள்ளார்.

இந்த சம்பவம் தொடர்பிலான மரண விசாரணையின் போது குறித்த சிறுமியின் தாய் சாட்சியமளித்துள்ளார். அவரது சாட்சியத்தில்,

“உயிரிழந்திருப்பது எனது மகளாவார், மகளை சிகிச்சை நிலையத்திற்கு அழைத்துச் சென்றிருந்தேன். அதன் போது விட்டமின் மற்றும் பூச்சி மருந்து என்பன வழங்கப்பட்டன.

எடை குறைந்த காரணத்தினால் மருந்து வழங்கப்பட்டிருந்தது. மகள் மருந்து குடிப்பதற்கு விரும்ப மாட்டார். அதனால் பணிக்கு செல்வதற்கு முன்னதாக அவரது தந்தை பூச்சி வில்லையை இரண்டாக உடைத்து ஒரு பாதியை தண்ணீருடன் கொடுத்தார்.

பின்னர் மறு பாதியையும் தொண்டையில் இட்டு தண்ணீர் கொடுத்தார் அப்போது மக்கள் “அப்பா” என சத்திமிட்டார். அதன் பின்னர் மகளின் முதுகில் பலமாக தட்டினோம், தலை கீழாக தொங்கவிட்டு தட்டினோம், பின்னர் வைத்தியசாலைக்கு அழைத்துச் சென்றோம்.

அங்கிருந்து சிறுவர் நல வைத்தியசாலைக்கு மகள் மாற்றப்பட்டார் அங்கு சிகிச்சை பலனின்றி மகள் உயிரிழந்தார்” என சிறுமியின் தாய் சாட்சியமளித்துள்ளார்.

இந்த விசாரணைகளின் அடிப்படையில் சிறுமி பூச்சி மாத்திரை தொண்டையில் இறுகி உயிரிழந்துள்ளார் என கொழும்பு சட்ட வைத்திய அதிகாரி ராஹுல் அக் அறிவித்துள்ளார்.