23ம் திகதி தொடக்கம் புகையிரத ஊழியர்கள் பணிநிறுத்தம்!!

558

இலங்கை புகையிரத திணைக்களத்தின் மூன்று பிரிவுகளைச் சேர்ந்த ஊழியர்கள் எதிர்வரும் 23ம் திகதி தொடக்கம் வேலைநிறுத்தம் மேற்கொள்ளவுள்ளதாக அறிவித்துள்ளனர்.

சம்பள முரண்பாடு மற்றும் வெற்றிடங்கள் காணப்படும் பதவிகளுக்கு புதியவர்களை சேவையில் இணைத்துக் கொள்ள நடவடிக்கை மேற்கொள்ளப்படாமை போன்ற விடயங்களை முன்வைத்து இவர்கள் தங்களின் வேலைநிறுத்தத்தை மேற்கொள்ளவுள்ளதாக அறிவித்துள்ளனர்.

பயணிகளுக்கான பயணச் சீட்டு வழங்குனர், பொதிகள் பரிசோதகர், புகையிரத நிலைய சமிக்ஞை பணியாளர்கள் ஆகியோர் குறித்த வேலை நிறுத்தத்தில் ஈடுபடவுள்ள நிலையில் புகையிரத சேவைகள் முற்றாக பாதிக்கப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகின்றது.

மேலும், இன்னும் சில தினங்களில் பௌத்தர்களின் பொசொன் தின கொண்டாட்டங்கள் நடைபெறவுள்ள நிலையில் புகையிரத பணியாளர்களின் வேலை நிறுத்தம் காரணமாக அநுராதபுரத்துக்கான விசேட ரயில் சேவைகளும் பாதிக்கப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகின்றது.