இந்தியாவில் 17 வயதான சிறுமி தூக்கிட்டு தற்கொலை செய்த நிலையில் பரீட்சையில் தோல்வியடைந்ததால் அவர் இம்முடிவை எடுத்திருக்கலாம் என பொலிசார் கருதுகிறார்கள்.
குஜராத் மாநிலம் அகமதாபாத்தை சேர்ந்தவர் பாபு படேல். இவர் மகள் நீட்டா (17). நீட்டா பனிரெண்டாம் வகுப்பு தெரிவை எழுதியிருந்த நிலையில் சமீபத்தில் முடிவுகள் வந்தது.
இதில் அவர் தேர்ச்சி பெறவில்லை, இதனால் மனவருத்தத்துடன் நீட்டா இருந்து வந்த நிலையில் சில தினங்களுக்கு முன்னர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.
சம்பவ இடத்துக்கு வந்த பொலிசார் நீட்டாவின் சடலத்தை கைப்பற்றியதோடு, அவர் எழுதி வைத்திருந்த கடிதத்தையும் கைப்பற்றினார்கள்.
அதில், நான் சோர்வாக இருக்கிறேன், தற்கொலை செய்ய விரும்புகிறேன். என் சகோதரிகளின் எதிர்காலம் நன்றாக அமையவேண்டும் என எழுதப்பட்டிருந்தது.
இதை வைத்து தேர்வில் தோல்வியடைந்ததால் அவர் இம்முடிவை எடுத்திருக்கலாம் என பொலிசார் கருதும் நிலையில் அவர் குடும்பத்தாரிடம் இது குறித்து விசாரித்து வருகிறார்கள்.