வவுனியா குளக்கட்டு பகுதியில் வீசப்பட்டுள்ள கோழி இறைச்சியின் எச்சங்கள் : மக்கள் விசனம்!!

316

வவுனியா – வைரவப்புளியங்குளத்தின், குளக்கட்டு பகுதியில் கோழி இறைச்சியின் எச்சங்கள் ஒரு பையினுள் போடப்பட்டு வீசப்பட்டுள்ளதால் அந்த பகுதியினூடாக பயணம் செய்பவர்கள் அசௌகரியத்திற்கு உள்ளாவதாக மக்கள் தெரிவித்துள்ளனர்.

வைரவப்புளியங்குளம் பகுதியில் கோழி இறைச்சி வியாபார நிலையம் வைத்திருக்கும் ஒருவரே தனது வியாபார நிலையத்தில் இறைச்சிக்கு வெட்டப்படும் கோழியின் எச்சங்களை அங்கு வீசிவிட்டுச் செல்வதாக தெரியவந்துள்ளது.

கடந்த காலங்களில் குளக்கட்டு பகுதிகளில் பொதுமக்கள் தங்களது வீட்டுக்கழிவுகளையும், குப்பைகளையும் வீசி வந்துள்ளனர்.

எனினும், இந்த செயற்பாடுகள் தற்போது கட்டுப்படுத்தப்பட்ட போதிலும் கோழி இறைச்சி வியாபார நிலையத்திலிருந்து நேற்று பெருமளவான கோழி இறைச்சியின் எச்சங்கள் பொதி செய்யப்பட்டு வீசப்பட்டுள்ளதாக மக்கள் குறிப்பிட்டுள்ளனர்.

இதனையடுத்து, அங்கு செயற்பட்டு வரும் இளைஞர்கள் விழிப்புணர்வு குழுவினர் வைரவப்புளியங்குளம் பகுதியிலுள்ள குறித்த கோழி இறைச்சி வியாபார நிலையத்திற்கு சென்று குளக்கட்டு பகுதியில் வீசப்பட்ட கோழியின் எச்சங்கள் தொடர்பாக வினவியபோது, தமது வியாபார நிலையத்திலிருந்தே கழிவுகள் வீசப்பட்டுள்ளதாகவும், தாம் அதனை அப்புறப்படுத்துவதாகவும் குறிப்பிட்டுள்ளனர்.

எனினும், இன்று காலை வரையில் கழிவுகள் குளத்திலிருந்து அப்புறப்படுத்தபடாத நிலையில் விடயம் தொடர்பில் நகரசபையினருக்கு முறையிடுவதற்கு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக பிரதேச மக்கள் கூறியுள்ளனர்.