படையினரின் மின்சார வேலியில் சிக்கி யானை பரிதாபமாக பலி!!

944

 

விசுவமடு பகுதியில் படையினரின் மின்சார வேலியில் சிக்கிய யானை ஒன்று பரிதாபகரமாக உயிரிழந்துள்ளது. குறித்த பகுதியில் 68ஆவது படைப்பிரிவு இராணுவத்தினர் விவசாய பண்ணை ஒன்றை அமைத்துள்ளனர்.

அதற்கு பாதுகாப்பாக மின்சார இணைப்பு வேலி ஒன்றை நிர்மாணித்திருந்தனர். இந்த நிலையில் இன்று அதிகாலை குறித்த மின்சார வேலியில் சிக்கிய யானை ஒன்று பரிதாபகரமாக உயிரிழந்துள்ளது.

சம்பவம் குறித்து வடபிராந்திய வனவள ஜீவராசிகள் திணைக்கள கால்நடை வைத்தியர் பா.கிரிதரன் சம்பவ இடத்திற்கு நேரில் சென்று உயிரிழந்த யானையின் இறப்பு தொடர்பில் மருத்துவ பரிசோதனை மேற்கொண்டுள்ளதாக குறிப்பிடப்படுகின்றது.