வவுனியா மாவட்ட செயலக ஊழியர்களுக்கு உடற்பயிற்சி நிகழ்வு!!

345

தேசிய உடற்பயிற்சி வாரத்தை முன்னிட்டு வவுனியா மாவட்ட செயலகத்திலுள்ள உத்தியோகத்தர்களுக்கு உடற்பயிற்சி நிகழ்வு மாவட்ட அரசாங்க அதிபர் சோமரத்தின விதான பத்திரன தலைமையில் நேற்று (21.05) முன்னெடுக்கப்பட்டது.

இலங்கை விளையாட்டு அபிவிருத்தி திணைக்களத்தின் அனுசரணையுடன், ஜனாதிபதியின் பணிப்புரைக்கு அமைவாக நாடுபூராவும் நடைபெற்றுவரும் தேசிய உடற்பயிற்சி வாரத்தை முன்னிட்டு 21 ஆம் திகதியிலிருந்து 25 ஆம் திகதிவரை இந்நிகழ்வுகள் முன்னெடுக்கப்படவுள்ளன.

அத்துடன் வவுனியா பிரதேச செயலகங்கள் மற்றும் பிரதேசசபை ஊழியர்களுக்கிடையில் கரப்பந்தாட்ட நிகழ்வுகளும், பெண்களுக்கான வலைப்பந்தாட்ட நிகழ்வுகளும் வவுனியா மாவட்ட செயலகத்தின் மைதானத்தில் நடைபெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.