சுவிஸ்லாந்திற்கு கொண்டு செல்லப்பட்ட இலங்கையின் 11ஆயிரம் குழந்தைகள்!!

229

கடந்த 1980ஆம் ஆண்டு காலப் பகுதிகளில் 11ஆயிரம் குழந்தைகள் இலங்கையிலிருந்து சுவிஸ்லாந்திற்கு தத்தெடுக்கப்பட்டு கொண்டு செல்லப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

குறித்த காலப்பகுதியில் இலங்கை வந்த மேற்கத்தேய தம்பதியினரால் இந்தக் குழந்தைகள் தத்தெடுக்கப்பட்டு சுவிஸ்லாந்திற்கு கொண்டு செல்லப்பட்டதாக சர்வதேச ஊடகமொன்று தெரிவித்துள்ளது. குறித்த குழந்தைகள் தற்போது இளமைப்பருவத்தை அடைந்துள்ளனர்.

இந்த நிலையில், சட்ட விரோதமாக கொண்டு செல்லப்பட்டுள்ளனரா என்பது தொடர்பிலான தேடலை அவர்கள் ஆரம்பித்துள்ளதாகவும் அந்த ஊடகம் குறிப்பிட்டுள்ளது.

அத்துடன், அவர்கள் தமது உண்மையான இலங்கைப் பெற்றோர் மற்றும் முன்னைய வசிப்பிடம் குறித்த தகவல்களை தேடவும் ஆரம்பித்துள்ளனர்.

இலங்கையிலிருந்து 1980ஆம் ஆண்டு காலப் பகுதியில் குழந்தைகள் கொண்டுசெல்லப்பட்டமை தொடர்பான இந்த தகவல் சுவிஸ்லாந்தின் தொலைக்காட்சி நிகழ்ச்சியொன்றில் வெளிப்படுத்தப்பட்டுள்ளது.