விபத்தில் இறந்த மகன் : பிரிவை தாங்க முடியாமல் தற்கொலை செய்ந்துகொண்ட பெற்றோர்!!

358

நாமக்கல் மாவட்டத்தில் மகன் இறந்த சோகம் தாங்கமுடியாமல் பெற்றோர் தற்கொலை செய்துகொண்டது சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

சக்திவேல் – சுதா தம்பதியினரின் ஒரே மகன் நிஷாந்த். இவர் நேற்று தனது நண்பருடன் மோட்டார் சைக்கிளில் சென்றுகொண்டிருந்தபோது விபத்தில் சிக்கி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

இந்நிலையில், மருத்துவமனையில் நிஷாந்தின் உடல் பிரதே பரிசோதனைக்காக கொண்டுசெல்லப்பட்டது. மருத்துவமனைக்கு வந்த பெற்றோர், தங்கள் மகன் இறந்துவிட்டதை தாங்கிகொள்ள முடியாமல் கதறி அழுதுள்ளனர்.

நமக்கு இருந்த ஒரே மகனும் இறந்துவிட்டதால், இனி நாமும் உயிர்வாழக்கூடாது என குளிர்பானத்தில் விஷம் கலந்து குடித்து தற்கொலை செய்துகொண்டனர். இந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.