தனது மகளை துஸ்பிரயோகத்திற்கு உட்படுத்திய தந்தைக்கு நேர்ந்த கதி!!

434

திருகோணமலை – மூதூர், நெய்தல் நகர் பகுதியில் 11 வயதான தனது மகளை துஸ்பிரயோகத்திற்கு உட்படுத்திய தந்தையொருவர் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.

இது தொடர்பான வழக்கு இன்றைய தினம் மூதூர் நீதவான் எம்.எஸ்.எம்.சம்சுதீன் முன்னிலையில் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்ட போதே குறித்த நபரை எதிர்வரும் 04ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிடப்பட்டுள்ளது.

சம்பவம் தொடர்பில் மூதூர் நெய்தல் நகரை சேர்ந்த ரபாய்தீன் இல்யாஸ் எனும் 35 வயதான நபரொருவரே விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.

சிறுமியின் தாயும், தந்தையும் குடும்ப தகராறு காரணமாக பிரிந்துள்ள நிலையில், தாய் வேறொரு திருமணம் செய்து கொண்டுள்ளார். இந்த நிலையில் சிறுமியும், அவரது சகோதரரும் தந்தையின் பராமறிப்பில் இருந்து வந்துள்ளனர்.

இதனையடுத்து தந்தை இரண்டாவது திருமணம் செய்து கொண்டுள்ளதுடன், மனைவி வெளிநாட்டில் இருப்பதாக தெரியவருகிறது.

சிறுமி துஸ்பிரயோகத்திற்கு உட்படுத்தப்பட்டு வரும் சம்பவம் தொடர்பில் உறவினர்களும், அயலவர்களும் பொலிஸாரிடம் முறைப்பாடொன்றை மேற்கொண்டதன் அடிப்படையிலேயே தந்தை மகளை இரண்டு வருடங்களாக துஸ்பிரயோகத்திற்கு உட்படுத்தி வந்துள்ளமை தெரிய வந்துள்ளது.

மேலும், சிறுமி சட்ட வைத்திய பரிசோதனைக்காக திருகோணமலை பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக மூதூர் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.