களனிவெலி பாதையில் தடம் புரண்ட ரயில்!!

573

களனிவெலி பாதையில் ​நேற்றிரவு புகையிரத வண்டியொன்று தடம்புரண்டதன் காரணமாக குறித்த ரயில் பாதையில் போக்குவரத்து தடைப்பட்டுள்ளது.

கொழும்பு கோட்டையிலிருந்து அவிசாவளை நோக்கிச் சென்றுகொண்டிருந்த புகையிரதம் ஒன்றே நேற்று மாலை இவ்வாறு தடம்புரண்டுள்ளது.

நேற்று மாலை 5.30 ஹோமாகம- பன்னிப்பிட்டியவுக்கு இடைப்பட்ட பகுதியில் பயணித்துக் கொண்டிருந்த ரயில் திடீரென்று தடம்புரண்டபோது அதில் ஐநூறுக்கும் மேற்பட்ட பயணிகள் இருந்துள்ளனர்.

ரயில் தடம்புரண்டதை அடுத்து பயணிகள் பாதுகாப்பாக பேரூந்துகள் மூலம் பயணத்தைத் தொடர ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டிருந்தது.

எனினும் தடம்புரண்ட ரயிலை அப்புறப்படுத்தும் நடவடிக்கையில் ஏற்பட்டுள்ள தாமதம் காரணமாக தற்போதைக்கு களனிவெலிப் பாதை ரயில் போக்குவரத்து நுகேகொடை வரை மட்டுப்படுத்தப்பட்டுள்ளது.

இதன் காரணமாக குறித்த ரயில் ​சேவையை நம்பியிருக்கும் ஏராளமான அரசாங்க மற்றும் தனியார் ஊழியர்களுக்கு புதன்கிழமை காலை அலுவலகம் செல்லும்போது போக்குரவத்து தொடர்பில் பெரும் அசௌகரியங்களை ஏற்படும் என்று எதிர்பார்க்கப்படுகின்றது.