கடற்கரைக்கு தனியாக சென்ற பெண்ணுக்கு நேர்ந்த சோகம்!!

1097

கனடாவில் கடற்கரைக்கு பெண்ணொருவர் சென்ற நிலையில் தண்ணீரில் மூழ்கி உயிரிழந்துள்ளார். நாட்டின் Tofino பகுதியில் தான் இச்சம்பவம் நடந்துள்ளது.

அன் விட்டர்ன்பெர்க் (52) என்ற பெண் அங்குள்ள கடற்கரைக்கு சென்ற நிலையில் நீரில் மூழ்கியுள்ளார்.
இதையடுத்து அருகிலிருந்தவர்கள் அவரை தண்ணீரிலிந்து மீட்ட நிலையில் முதலுதவி சிகிச்சை அளிக்க முயன்றுள்ளனர்.

ஆனால் அதற்குள் அன் பரிதாபமாக உயிரிழந்துள்ளார். சம்பவ இடத்துக்கு வந்த பொலிசார் அன்னின் சடலத்தை கைப்பற்றினார்கள்.

இதனிடையில் Tofino-வில் உள்ள பல கடற்கரைகளில் பாதுகாப்புக்கு ஆட்கள் இல்லை எனவும், அதிகளவு அலைகள் வருவதால் மக்கள் தங்களை பாதுகாத்து கொள்ள வேண்டும் எனவும் பொலிசார் தெரிவித்துள்ளனர்.