வெளியில் வர முடியாமல் தவிக்கும் நகைச்சுவை நடிகர் இமான் அண்ணாச்சி : அதிர்ச்சிக் காரணம்!!

407

பிரபல காமெடி நடிகரான இமான் அண்ணாச்சி வீட்டை விட்டு வெளியில் வரமுடியாமல் தவிப்பதாக கூறியுள்ளார். தமிழகத்தின் தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள ஸ்டெர்லைட் ஆலையை மூடக் கோரி பொதுமக்கள் நடத்திய போராட்டத்தின் காரணமாக 13 பேர் பலியாகியுள்ள நிலையில், தூத்துக்குடியைச் சேர்ந்த பிரபல காமெடி நடிகர் இமான் அண்ணாச்சி பிரபல தமிழ் நாளிதழ் ஒன்றிற்கு பேட்டியளித்துள்ளார்.

அதில், தற்போது நான் தூத்துக்குடியில் இருக்கிறேன். எங்கள் தேவாலயத்தின் 75-ஆம் ஆண்டு விழாவிற்காக இங்கு வந்துள்ளேன்.

எனக்கு 23 வயது இருக்கும் போது ஸ்டெர்லைட் ஆலை இங்கு வந்தது. அப்போதே பலரும் இந்த ஆலையால் மூச்சுத் திணறல் ஏற்படும், நச்சுக் காற்று பரவும் என்று எல்லாம் கூறினர்.

இந்த ஆலையால் நிறைய மக்கள் பாதிப்புகுள்ளாகியிருக்கின்றனர். இதனால் அப்போது ஆரம்பிக்கப்பட்ட போராட்டம் தற்போது வரை ஆலையை மூடக்கோரி நடந்து வருகிறது.

இந்த 100-வது நாள் போராட்டத்தில் நானும் கலந்து கொண்டேன், அங்கு என்ன நடந்தது என்பது எனக்கும் தெரியும். மக்கள் அமைதியான முறையில்தான் போராடினார்கள்.

கலெக்டர் அலுவலகத்தை முற்றுகையிட போக அது, இப்படியொரு கலவரமாக மாறும் என்று யாரும் எதிர்பார்க்கவில்லை. நியாமான பிரச்சனைக்காக போராடுற மக்களை நோக்கி, துப்பாக்கியால் நெஞ்சில் சுடுறது எவ்வளவு மோசமான செயல், துப்பாக்கிச் சூட்டின் காரணமாக பலர் இறந்திருந்த போது, உடனடியாக முதல்வர் நிவாரணமாக 10 லட்சம் ரூபாய் தருவதாக கூறுகிறார்.

இதை எப்படி சொல்வது? நம்ம குடும்ப உறுப்பினர்கள் நம்மளைவிட்டுப் பிரிந்துவிட்டால் நம்ம மனநிலை எப்படியிருக்கும். கலவரம் அடங்கிய பிறகு இந்த நிவாரணத் தொகையை கூறியிருக்கலாம்.

துப்பாக்கிச் சூட்டின் போதும் அவர்கள் முறையாக பின்பற்றவில்லை, முதலில் வானத்தை நோக்கி சுட்டிருக்க வேண்டும். அல்லது முட்டிக்கு கீழே சுடுவாங்க, தண்டனை குற்றவாளியா இருந்தா கூட காலுக்கு கீழே தான் சுட வேண்டும்.

பொலிசார் ஏன் நெஞ்சுல சுட்டாங்க என்று தெரியவில்லை. எனக்கு தெரிந்தவரை இந்த ஆலையை மூடுவார்கள் என்ற நம்பிக்கை எனக்கு இல்லை, எத்தனை உயிர்கள் போயிருக்கிறது, அதற்கு மரியாதை கொடுக்கும் விதமாக இந்த நேரம் ஆலையை மூடியிருக்க வேண்டாமா என்ற கேள்வியும் எழுப்பியுள்ளார்.