என் தங்கையின் உடலை எட்டி உதைத்தார்கள் : தங்கையை பறிகொடுத்த அண்ணன் கண்ணீர்!!

427

தூத்துக்குடி துப்பாக்கி சூட்டில் பலியான இளம் பெண்ணின் அண்ணன் சம்பவம் குறித்து சோகத்துடன் விளக்கியுள்ளார். ஸ்டெர்லைட்டுக்கு எதிராக நடைப்பெற்ற போராட்டத்தில் 13 பேர் பொலிசாரால் சுட்டு கொல்லப்பட்டனர்.

இதில் ஒருவர் தான் ஸ்னோலின் வெனிஸ்டா (18). இவரின் தாடையில் பாய்ந்த குண்டு பின்னர் கழுத்து பகுதி வரை சென்ற நிலையில் சம்பவ இடத்திலேயே ஸ்னோலின் உயிரிழந்தார்.

ஸ்னோலினின் சகோதரர் காட்வின் இது குறித்து கூறுகையில், ஸ்னோலின் இறந்தவுடன் அவர் உடலை பொலிசார் எட்டி உதைத்துள்ளனர்.

அம்மா, ஏழு மாசக் குழந்தை, மூணு வயசுப் பொண்ணு, தங்கச்சி, என் மனைவி எனக் குடும்பமே ஸ்டெர்லைட்டுக்கு எதிரான பேரணியில் கலந்துகிட்டோம்

ஆட்சியர் அலுவலகத்தை நெருங்கியதும், கண்ணீர்ப் புகைக்குண்டு வெடித்தது, அப்பறம் திடீரென துப்பாக்கி சூட்டை ஆரம்பிச்சுட்டாங்க. அந்தக் களேபரத்துல என மனைவியையும் தங்கச்சியையும் காணலை.

அடுத்த ஒரு மணி நேரத்தில் செய்தியில் வந்த போட்டாவைப் பார்த்து தான் குண்டடிபட்டு இறந்ததில் என் தங்கையும் இருப்பது தெரிந்தது.

என் மனைவி வேரொருவர் வீட்டுல ஒளிஞ்சிருந்து மாலை அஞ்சு மணிக்குத்தான் வீட்டுக்கு வந்தாங்க என கூறியுள்ளார்.

மேலும் என்ன வேண்டுமானாலும் நடக்கட்டும். ஸ்டெர்லைட்டை மூடும்வரை எங்கள் குரல் ஒலித்துகொண்டே இருக்கும் என காட்வின் குமுறலுடன் முடிக்கிறார்.