வவுனியா ஏ9 வீதியில் புட்சிட்டிக்கு எதிராக அமைந்துள்ள ஆடை விற்பனை நிலையம் இன்று (24.05.2018) இரவு 9.30 மணியளில் திடீரேன ஏற்பட்ட தீ காரணமாக பற்றி எரிகின்றது.
சம்பவ இடத்திற்கு விரைந்த வவுனியா நகரசபை தீயணைப்பு படையினரின் உதவியுடன் வவுனியா பொலிஸாரும் இணைந்து தீயினை கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவருவதற்குறிய நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
தீ விபத்திற்க்கான காரணம் இது வரையில் கண்டறிப்படாத நிலையில் வவுனியா பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்து வருவதாகவும் இலங்கை மின்சார சபையினர் மின்சாரத்தினை துண்டிக்கும் நடவடிக்கையிலும் ஈடுபட்டுள்ளனர் என எமது பிராந்திய செய்தியாளர் தெரிவித்தார்.















