இலங்கையில் திகில் சம்பவம் : கமராவில் சிக்கிய அரிய காட்சிகள்!!

927

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு சுற்றுலா பயணிகளின் மனம் கவர்ந்த இடமாக யால வனவிலங்கு பூங்கா மாறியுள்ளது. அங்கு வாழும் மிருகங்களின் செயற்பாடுகளே இதற்கு காரணமாக உள்ளது.

இந்நிலையில் அண்மையில் அங்கு சுற்றுலா பயணத்தில் ஈடுபட்டவர்ளுக்கு அரிய காட்சி ஒன்றை காண முடிந்துள்ளது. அந்த காட்சி இலங்கை புகைப்பட கலைஞரின் கமராவிலும் சிக்கியுள்ளது.

முதலையும் பாரிய பாம்பும் மோதிக்கொள்ளும் காட்சியே இவ்வாறு பதிவாகியுள்ளது. அந்த மோதலின் இறுதியில் பாம்பு முதலையிடம் தோற்று உயிரிழந்துள்ளது.

இதன்போது எடுக்கப்பட்ட புகைப்படங்கள் ஊடகங்களில் பிரபல்யமடைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.