வௌ்ளவத்தையில் ரயில் மோதி 22 வயது இளைஞன் பலி!!

1169

trainவௌ்ளவத்தை பிரதேசத்தில் மருதானையிலிருந்து பாணந்துறை நோக்கி பயணித்த ரயிலில் மோதுண்டு இளைஞர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

நேற்று மாலை இந்தச் சம்பவம் குறித்து வௌ்ளவத்தை பொலிஸில் பதிவாகியுள்ளது. கம்பஹாவைச் சேர்ந்த 22 வயதுடைய இளைஞன் ஒருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

இவரது சடலம் களுபோவில வைத்தியசாலையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளது.