கை, கால்கள் கட்டிப் போட்டு இளைஞர் கொடூர முறையில் கொலை!!

377

தமிழகத்தில் இளைஞர் ஒருவர் கை, கால்கள் கட்டப்பட்டு கொடூர முறையில் கொலை செய்யப்பட்டிருக்கும் சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

காஞ்சிபுரமாவட்டம், செங்கல்பட்டு பெரியநத்தம் மும்மலைப் பகுதியில் இளைஞர் ஒருவர் கொடூரமான முறையில் கழுத்தறுத்து இறந்து கிடப்பதாக பொலிசாருக்கு தகவல் கிடைத்துள்ளது.

அதன் பின் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த பொலிசார், உடலை கைப்பற்றி செங்கல்பட்டு அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.

இதையடுத்து இது தொடர்பாக வழக்கு பதிவு செய்து விசாரித்து வந்த பொலிசார், கொலை செய்யப்பட்டு கிடந்தது, தட்டான்மலை தெருவை சேர்ந்தவர் உமாபதி மகன் தான் நவீன்குமார்(18) என்பது தெரியவந்துள்ளது.

10-ஆம் வகுப்பு படித்துவிட்டு, நண்பர்களுடன் சேர்ந்து போதைக்கு அடிமையாகி கஞ்சா புகைப்பது, மது அருந்துவது போன்ற செயல்களில் ஈடுபட்ட வந்த நவீன்குமார் மீது, ஏற்கனவே அடிதடி வழக்குகள் உள்ளதால், முன்விரோதம் காரணமாக யாரேனும் இந்த கொலையை செய்திருக்கலாம் என்று பொலிசார் சந்தேகிக்கின்றனர்.

மேலும் நவீன்குமாரை கை, கால்களை கட்டி முகம், கழுத்து, தலை, பிறப்பு உறுப்பு உள்ளிட்டவைகளை கொடூரமாக அறுத்து கொலை செய்துள்ளதால், இது கள்ளக்காதல் விவகாரமாக கூட இருக்கலாம் என்ற கோணத்திலும் பொலிசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.