மகனை வரவழைத்துவிட்டு தற்கொலை செய்து கொண்ட பெற்றோ ர்: உருக்கமான கடிதம் சிக்கியது!!

355

தமிழகத்தில் மகனை வரவழைத்துவிட்டு, கடன் தொல்லை தாங்க முடியாமல் பெற்றோர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

திருச்சி கே.கே.நகர் அய்யப்ப நகரை சேர்ந்தவர் வெங்கடேசன் (62). வீடு கட்டி விற்கும் தொழில் செய்து வரும் இவருக்கு லீலா என்ற மனைவியும், ராஜேஷ் என்ற மகனும் உள்ளனர்.

ராஜேஷ் இன்ஜினியரிங் முடித்த நிலையில், தற்போது ஐ.ஏ.எஸ் போட்டித் தேர்வுக்காக சென்னையில் தங்கி படித்து வந்ததாக கூறப்படுகிறது.

இந்நிலையில் தொழிலில் தொடர்ந்து நஷ்டம் ஏற்பட்டதால், வெங்கடேசன் மிகுந்த வேதனையில் இருந்துள்ளார்.

அதுமட்டுமின்றி தொழிலுக்காக வாங்கிய கடன்களையும் கட்ட முடியாமல் அவதிப்பட்டு வந்துள்ளார். இதையடுத்து வெங்கடேசன் மனைவியுடன் தற்கொலை செய்து கொள்வதற்கு முடிவு எடுத்துள்ளார்.

அதன் பின் சென்னையில் இருக்கும் ராஜேசிடம் போனில் தொடர்பு கொண்டு, பழனி கோவிலுக்கு போக வேண்டும் என்று கூறி வரவழைத்துள்ளனர்.

இதன் காரணமாக நேற்று முன் தினம் இரவு வந்த ராஜேஷ் வீட்டின் கதவை பூட்டிருப்பதை பார்த்துவிட்டு, ஜன்னல் வழியாக எட்டிப் பார்த்துள்ளார்.

அப்போது தந்தை வெங்கடேசன், தாய் லீலா இருவரும் தூக்கில் பிணமாக தொங்கியதை பார்த்து கதறி அழுதுள்ளார்.

இதைக் கேட்டு அக்கம், பக்கத்தினர் உடனடியாக விரைந்து வந்து கதவை உடைத்து உள்ளே சென்றுள்ளனர்.

இது குறித்த தகவல் பொலிசாருக்கு தெரிவிக்கப்பட்டதால், பொலிசார் உடலை பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.

இதற்கிடையில் அவர்கள் வீட்டில் கடிதம் ஒன்று இருப்பதை பொலிசார் கண்டுள்ளனர். அதில், எங்களது உடல்களை மீண்டும் இந்த வீட்டிற்கு கொண்டு வர வேண்டாம்.

நாங்கள் இறந்ததை உறவினர்கள் யாருக்கும் சொல்ல வேண்டாம் என மிகுந்த வேதனையுடன் எழுதியுள்ளனர்.