வவுனியா நெளுக்குளம் பகுதியில் மனைவியை சரமாரியாக வெட்டிய கணவன் பொலிசில் சரண்!!

818

வவுனியா நெளுக்குளம் பகுதியில் மனைவியை சரமாரியாக வெட்டிய கணவன் பொலிசில் சரணடைந்துள்ளார். இச் சம்பவம் பற்றி மேலும் தெரியவருகையில்..

வவுனியா நெளுக்குளம் குழுமாட்டு சந்தி பகுதியில் உள்ள ஒருவர் தனது மனைவியை  கத்தியினால் வெட்டிய பின் நெளுக்குளம் பொலிஸாரிடம் சரண்டைந்துள்ளார்.

கணவன் வெட்டியதில் படுகாயமடைந்த மனைவி வவுனியா பொதுவைத்தியசாலையில் அவசர சிகிச்சைப் பிரிவில் சிகிச்சை பெற்று வருகிறார்.

இந்த சம்பவம் இன்று காலை (28.05.2018) இடம்பெற்றுள்ளது மேலும் இவர்களுக்கு மூன்று பெண் பிள்ளைகள் உள்ளனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.