வவுனியா நகரில் கடை உடைக்கப்பட்டு திருட்டு!!

323

வவுனியா ஹொரவப்பொத்தான வீதி இறம்பைக்குளம் பகுதியில் உள்ள கடையொன்றினை உடைத்து கொள்ளையடித்த சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது

நேற்றைய தினம் வவுனியா பொலிஸாருக்கு கிடைத்த முறைப்பாட்டினையடுத்து குறித்த கொள்ளை சம்பவம் தொடர்பான விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

குறித்த கடையினை உடைத்து 80000 ரூபா பணம் மற்றும் மடிக்கணினி ஒன்றும் களவாடப்பட்டுள்ளது. குறித்த பகுதியிற்கு விரைந்த தடகவியல் பொலிஸார் மற்றும் வவுனியா குற்றத்தடுப்பு பிரிவினர் மோப்பநாய் மூலம் கொள்ளையர்களை கண்டுபிடிக்கும் முயற்சியில் களமிறங்கியுள்ளனர்.

நேற்றுமுன்தினம் (26.05) இரவுவேளையே கடையுடைப்பு சம்பவம் இடம்பெற்றுள்ளதுடன், வவுனியா நகரில் ஒருவார காலத்திற்குள் நடந்த இரண்டாவது கொள்ளை சம்பவம் இது என்பதும் குறிப்பிடத்தக்கது.