வாய்த் தகராறால் பலியான உயிர் : 6 பேர் திட்டமிட்டு நடத்திய கொடூரம்!!

339

 

வாய் தகராறினால் சென்னை இளைஞர் ஒருவரை 6 பேர் கொண்ட கும்பல் கத்தியால் குத்திக் கொலை செய்த கொடூரம் நடந்துள்ளது.

சென்னை கண்ணகி நகரை சேர்ந்த விமல் (23) என்பவர் பெயிண்டராகவும், ஞாயிற்றுக்கிழமைகளில் கறிக்கடையும் நடத்தி வருபவர்.

இரண்டு நாட்களுக்கு முன் நடந்த ஒரு விழாவில் நடனம் ஆடிய போது ஒரு தரப்பினருக்கும் விமலுக்கு இடையே வாய் தகராறு ஏற்பட்டுள்ளது.

அதன் பின் விமலைக் கொலை செய்ய அந்த கும்பல் முடிவு செய்து மோஜோ (18) என்பவரை விமல் வீட்டிற்கு அனுப்பி தூங்கி கொண்டிருந்த விமலை எழுப்பி மது அருந்தவருமாறு அழைத்துள்ளது.

விமலும் மோஜோவை நம்பி ஏரிக்கரை அருகே வந்து குடித்திருக்கிறார். போதையில் இருந்த விமலை 6 பேர் கொண்ட கும்பல் கத்தியால் தாறுமாறாக குத்திக்கொலை செய்து விட்டு பின் தப்பித்து சென்றுவிட்டது.

இத் தகவல் அறிந்த கண்ணகி நகர் பொலிசார் விமல் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். கண்ணகி நகரில் மேலும் பதட்டம் ஏற்படாமல் காக்க அங்கு ஏராளமான பொலிசார் குவிக்கப்பட்டுள்ளனர்.

விமலின் தந்தை வீரய்யன் கொடுத்த புகாரின் பேரில், தப்பியோடியவர்கள் மீது கொலை வழக்கு பதிவு செய்து பொலிசார் தேடி வந்தனர்.

இவர்களில் மோஜோ (18) மற்றும் பிரவீன் (18) ஆகிய இருவரையும் கைது செய்துள்ள பொலிசார் மேலும் ஒருவரை தேடி வருகின்றனர்.