ராட்டினம் நொறுங்கி கோர விபத்து : சிறுமி பலி : சோகமயமான கோடைக் கண்காட்சி!!

347

ஆந்திர மாநிலம் அனந்தபூரில் கோடைகால பொருட்காட்சி நடைபெற்று வந்தது. விடுமுறை தினமான நேற்று ஏராளமானோர் பொருட்காட்சிக்கு வருகை தந்தனர். கட்டுக்கடங்காத கூட்டம் காணப்பட்டது.

பொருட்காட்சியில் குழந்தைகளை உற்சாகப்படுத்தும் ராட்டினமும் இருந்தன. அங்கிருந்த ‘ஜெயண்ட் வீல்’ ராட்டினத்தில் ஏராளமான குழந்தைகள் சுற்றி வந்தனர். இரவு வழக்கம்போல் ராட்டினம் சுத்திக் கொண்டு இருந்த நிலையில், அதில் கீழே இருந்து மேல் நோக்கி சென்ற இருக்கை ஒன்று திடீரென விழுந்து நொறுங்கியது.

அதில் பொருத்தப்பட்டு இருந்த ஸ்குரூ கழண்டு விழுந்ததால் இந்த விபத்து நடந்தது. அந்த இருக்கையில் அமர்ந்து இருந்த குழந்தைகள் பல அடி உயரத்தில் இருந்து கீழே விழுந்தனர். அவர்களில் அமிர்தா என்ற பெண் குழந்தை உயிரிழந்தது.

மேலும் 3 குழந்தைகள் உட்பட 6 பேர் பலத்த காயமடைந்தனர். உடனடியாக காவல்துறையினரும், போலீஸாரும் விரைந்து வந்து மீட்பு பணிகளை மேற்கொண்டனர். காயமடைந்தவர்கள் உடனடியாக மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.

பலர் பார்த்துக் கொண்டிருந்தபோது, ராட்டினம் இருந்து குழந்தைகள் மேலே இருந்து கீழே விழுந்த சம்பவம் அங்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. மக்கள் அலறியடித்துக் கொண்டு ஓடினர். பின்னர் பொருட்காட்சி மூடப்பட்டு மக்கள் அங்கிருந்து அமைதியான முறையில் அனுப்பி வைக்கப்பட்டனர்.

அந்த ராட்டினத்தை இயக்கிய நபர் குடிபோதையில் இருந்ததாகவும், இருக்கை ‘போல்ட்’ உருவி இருந்தது குறித்து ஏற்கெனவே அவரிடம் புகார் தெரிவித்தாவும், ஆனால் அவர் கண்டுகொள்ளவில்லை என பொதுமக்கள் புகார் தெரிவித்துள்ளனர்.