வவுனியா வடக்கில் ப.சத்தியலிங்கத்தால் வாழ்வாதார உதவிகள் வழங்கிவைப்பு!!

626

யுத்தத்தால் பாதிக்கப்பட்ட வவுனியா வடக்கு பிரதேச செயலகத்திற்குட்பட்ட பிரதேசத்தில் வாழும் 42 குடும்பங்களுக்கு வடக்கு மாகாண சபையின் உறுப்பினர் மருத்துவர் ப.சத்தியலிங்கத்தால் வாழ்வாதார உதவிகள் நேற்றுமுன்தினம் (26.05) வழங்கிவைக்கப்பட்டன.

மாகாணசபை உறுப்பினர்களுக்கான 2018ம் ஆண்டுக்கான நிதியொதுக்கீட்டில் மேற்படி வாழ்வாதார உதவிகள் வழங்கிவைக்கப்பட்டன.

நெடுங்கேணி கால்நடை வைத்தியர் பணிமனையில் நடைபெற்ற இந்த நிகழ்வில் 39 குடும்பங்களுக்கு நல்லின கோழிக்குஞ்சுகளும், 03 குடும்பங்களுக்கு ஆடுவளர்ப்பிற்கான காசோலைகளும் வழங்கிவைக்கப்பட்டன.

இந்த நிகழ்வில் வடமாகாண சபை உறுப்பினர் ஜி.ரி.லிங்கநாதன், வடக்கு பிரதேச சபையின் தவிசாளர் ச.தணிகாசலம் மற்றும் வடக்கு பிரதேச சபையின் உறுப்பினர்களும் கலந்துகொண்டிருந்தனர்.