வவுனியா குருமன்காடு தேர்திருவிழாவில் பலரின் தங்க நகைகள் திருட்டு!!

427

வவுனியா குருமன்காடு காளி அம்மன் தேர்திருவிழா நேற்று காலை இடம்பெற்றுள்ளது. இதன்போது பலரின் தங்க நகைகள் திருட்டுப்போயுள்ளதாக பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது. இச்சம்பவம் குறித்து மேலும் தெரியவருகையில்,

வவுனியா குருமன்காட்டுச் சந்தியிலுள்ள காளி அம்மன் ஆலயத்தின் தேர்திருவிழா நேற்று இடம்பெற்றுள்ளது. இதே நேரத்தில் அங்கு வந்த திருடர்கள் தமது கைவரிசையைக்காட்டி தேர்த்திருவிழாவிற்கு வந்திருந்த 5 பேரிடமிருந்து தங்க நகைகளை திருடிச் சென்றுள்ளனர்.

தங்க நகைகளைப் பறிகொடுத்தவர்கள் ஆலய பரிபாலன சபையினரிடமும் தெரியப்படுத்தியுள்ளதுடன் நான்கு பவுண் தங்க நகையை பறிகொடுத்த பெண்ணொருவர் பொலிஸ் நிலையத்தில் முறையிட்டுள்ளார்.

திருடர்கள் குறித்த 5 பேரிடமும் சுமார் 12 பவுண் நகைகளை திருடிச்சென்றுள்ளதாக பொலிஸாரின் விசாரணைகளில் இருந்து தெரியவந்துள்ளது.

இத்திருட்டுத் தொடர்பான மேலதிக விசாரணகளை வவுனியா பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.