வெயங்கொட பகுதிகளில் மகளின் திருமணம் தாமதமாகியதனால் தந்தை ஒருவர் தற்கொலை செய்து கொண்ட துயர சம்பவம் ஏற்பட்டுள்ளது. ஷேக்ஸ்பியர் என்ற நபர் ஒருவரே இவ்வாறு தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார்.
வீட்டில் காணப்பட்ட பிரச்சினையினால் மகளின் திருமணம் தாமதமாகியது. இதனால் கடுமையான மனவேதனையில் இருந்தவர் இவ்வாறு தற்கொலை செய்து கொண்டார்.
தற்கொலை செய்து கொள்வதற்கு அவருக்கு வேறு காரணங்கள் இருக்கவில்லை என மரண விசாரணையின் போது மனைவி தெரிவித்துள்ளார்.
மகளின் காதலன் ஏதோ சில காரணங்களுக்காக அண்மையில் பொலிஸாரினால் கைது செய்யப்பட்டார். நானும் மகளும் பொலிஸ் நிலையத்திற்கு சென்ற சந்தர்ப்பத்தில் கணவர் இவ்வாறு தற்கொலை செய்து கொண்டார். இந்த மரணம் தொடர்பில் வேறு சந்தேகங்கள் இல்லை என மனைவி குறிப்பிட்டார்.
தந்தை எழுதிய கடிதம் ஒன்றும் அவருக்கு அருகில் கிடந்ததாக கூறி மகள் பொலிஸாரிடம் கடிதத்தை வழங்கியுள்ளார்.