தமிழ்நாட்டில் பிறந்த பெண் குழந்தையை எரித்து கொலை செய்த தந்தையை பொலிசார் கைது செய்துள்ளனர்.
திருவண்ணாமலை மாவட்டத்தை சேர்ந்தவர் சிவக்குமார். இவருக்கும் இவரது மனைவி வேண்டாவுக்கும் ஏற்கெனவே இரு பெண் குழந்தைகள் உள்ளனர். இந்நிலையில் வேண்டாவுக்கு சமீபத்தில் அரசு மருத்துவமனையில் மீண்டும் மூன்றாவதாக பெண் குழந்தை பிறந்துள்ளது.
மூன்று குழந்தைகள் பிறந்து விட்டதால் கருத்தடை அறுவை சிகிச்சை செய்து கொள்ளுமாறு மருத்துவர்கள் அறிவுறுத்திய நிலையில் வேண்டா குழந்தையுடன் மருத்துவமனையிலிருந்து வெளியேறினார்.
இதனிடையே பச்சிளம் குழந்தை எரித்துக் கொல்லப்பட்டதாக எழுந்த புகாரின் பேரில் விசாரணை நடத்திய பொலிசார் குழந்தையின் தந்தை சிவக்குமாரை கைது செய்தனர்.
அவர் பொலிசாரிடம் அளித்துள்ள வாக்குமூலத்தில் மூன்றாவதாக பிறந்த பெண் குழந்தையையும் வளர்க்க முடியாது என எண்ணியதால் பச்சிளம் குழந்தை என்றும் பாராமல் எரித்துக் கொன்றதாக கூறியுள்ளார்.
இதையடுத்து குழந்தை எரித்து கொல்லப்பட்ட இடத்தில் பொலிசார் தடயங்களை சேகரித்த நிலையில் சிவக்குமார் மீது கொலை வழக்கு பதிவு செய்துள்ளனர்.