மலையடிவாரத்தில் எரித்து கொலை செய்யப்பட்ட இளம்பெண் : அதிர்ச்சியடைந்த பொலிசார்!!

542

தமிழகத்தில் இளம் பெண் ஒருவர் மலையடிவாரத்தில் உயிரோடு எரித்து கொலை செய்யப்பட்டிருக்கும் சம்பவம் அதிர்ச்சியடைய வைத்துள்ளது.

செங்கல்பட்டு அடுத்த பழவேலி மலையடிவாரத்தில் செங்கல்பட்டு எஸ்ஐ சுப்பிரமணியன் தலைமையில் பொலிசார் இன்று அதிகாலை ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர்.

அப்போது மலையடிவாரத்தின் ஒரு பகுதியில் தீ எரிந்து கொண்டிருந்ததால், பொலிசார் உடனடியாக அங்கு சென்று பார்த்த போது, இளம் பெண் ஒருவர் உயிரோடு எரிந்து கொண்டிருந்துள்ளார்.

இதைக் கண்டு அதிர்ச்சியடைந்த பொலிசார், சர்று தொலைவில் வாலிபர்கள் சிலர் இருசக்கர வாகனத்தில் தப்பிச் செல்வதையும் பார்த்துள்ளனர்.

அதன் பின் பொலிசார் தீயை அணைத்து பெண்ணின் சடலத்தை மீட்டுள்ளனர். அதன் அருகில் இருந்த சூட்கேஸில்

சுடிதார், சேலைகள் போன்றவைகள் எல்லாம் இருந்துள்ளதால், எரித்து கொல்லப்பட்ட இளம்பெண் யார், எந்த ஊரை சேர்ந்தவர் என விசாரித்து வருகின்றனர்.

சூட்கேஸ் இருந்ததால் வேலைக்காக வந்த இடத்தில் யாரேனும் மர்ம நபர்கள் நைசாக பேசி அழைத்து வந்து பலாத்காரம் செய்து கொலை செய்து எரித்தார்களா, காதல் தகராறில் நடந்ததா என்ற கோணத்திலும் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.