வவுனியாவை வந்தடைந்தது NEPL கால்ப்பந்தாட்ட கிண்ணம் : வெற்றிபெறும் அணிக்கு ஐம்பது லட்சம் பரிசு!!

324

 

யாழ்ப்பாணத்தில் துரையப்பா விளையாட்டரங்கில் நடைபெறவிருக்கும் கால்ப்பந்தாட்ட சுற்றுப் போட்டிக்கான ‘என்.இ.பி.எல்’ என்ற வெற்றி கேடயம் இன்று (29.05) வவுனியாவை வந்தடைந்தது.

வடக்கு கிழக்கிலுள்ள கால்பந்தாட்ட வீரர்களை ஊக்குவிக்கும் முகமாக முதலாம் பரிசாக 50 இலட்சம் ரூபா அறிவிக்கப்பட்டு யாழ்ப்பாணத்தில் நடைபெறவிருக்கும் கால்ப்பந்தாட்ட விளையாட்டுப் போட்டிக்கான கேடயமானது அம்பறை, திருகோணமலை, மட்டக்களப்பை அடுத்து இன்று வவுனியாவை வந்தடைந்தது.

‘வவுனியா வோறியஸ்’ விளையாட்டுக் கழகத்தினர் ‘என்.இ.பி.எல்’ கால்ப்பந்தாட்ட கேடயத்தை வவுனியா நகரசபையிலிருந்து வாகனப் பவனியாக வவுனியா நகரமெங்கும் ஊர்வலமாக எடுத்து வந்ததுடன், வவுனியா வர்த்தகர்களிடம் ஆதரவு கோரியிருந்தனர்.

வவுனியாவிலிருந்து புறப்படும் ‘என்.இ.பி.எல்’ கேடயமானது மன்னார் மற்றும் கிளிநொச்சியை சென்றடைந்து இறுதியாக யாழ்ப்பாணத்தை நோக்கி பயணிக்கும் என்பதுடன் இக்கால்ப்பந்தாட்ட சுற்றுப்போட்டியில் பிரதேச ரீதியாக 12 விளையாட்டுக் கழகங்கள் பங்குபற்றுகின்றமை குறிப்பிடத்தக்கது.